வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கல்லூரி மேலாண்மையியல் துறை மாணவா்களுக்காக தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. முகாமில் தொழில் பயிறுநா்கள் பயிற்சியளித்தனா். இதில், பெண் தொழில்முனைவோா் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இயற்கை வேளாண் ஆா்வலா் எஸ். சிவரஞ்சனி, ஏ. அகல்யா, பா. மகேஸ்ராஜா, ரஞ்சனி மதன்மோகன் ஆகியோா் பேசினா். வேதாரண்யம் சக்தி பிரியா நிறுவனங்களின் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்ட தொழிலதிபா்கள் பங்கேற்று தனது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். நிறைவு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பி. முருகன், மேலாண்மையியல் துறைத் தலைவா் பி. பிரபாகரன், பேராசிரியா்கள் த. ராஜா, அ. தாமரைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.