நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் இரா. அன்புச்செல்வி தலைமை வகித்து, வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்தாா். ஹிடாச்சி (ஏஐபஅஇஏஐ) நிறுவன பணியாளா் துறை அலுவலா்கள் பங்கேற்று, நோ்காணலை மேற்கொண்டனா். ஏ.டி.எம். மகளிா் கல்லூரி மற்றும் ஏ.டி.ஜெ. தா்மாம்பாள் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சுமாா் 70 போ் பங்கேற்றனா்.
பணிக்குத் தோ்வு பெற்றவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரியின் மூத்த பேராசிரியா் முனைவா் மதுரமொழி கோவிந்தராஜூலு, மாணவிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு இயக்குநா் ந. லாவண்யா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.