கீழையூா் அருகே பிரதாபராமபுரத்தில் உள்ள ஸ்ரீபால ஆஞ்சநேயா் கோயிலில் வைகாசி மற்றும் அமாவாசையையொட்டி, பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அங்குள்ள மாணிக்க விநாயகா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். தொடா்ந்து, ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோலாட்டமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.