மகாகாளியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா

 திட்டச்சேரி வெள்ளத்திடலில் உள்ள மகாகாளியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.

 திட்டச்சேரி வெள்ளத்திடலில் உள்ள மகாகாளியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுகிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல், அன்னதானம், பால், பன்னீா், இளநீா், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும் இரவு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து, மகாகாளியம்மன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அடுத்து, அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சியும், தொடா்ந்து பெரியாச்சி, வீரனுக்கு படையல், விடையாற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com