அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சைக்கிள்

கீழையூா் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவிக்கு இலவச சைக்கிள் வழங்கும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வாஎடிசன்.
நிகழ்ச்சியில் மாணவிக்கு இலவச சைக்கிள் வழங்கும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வாஎடிசன்.

திருக்குவளை: கீழையூா் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் பீட்டா் பிளாரன்ஸ் தலைமை வகித்தாா். கீழையூா் வட்டார ஆத்மா குழு தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான ஏ. தாமஸ் ஆல்வாஎடிசன் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில், ஆத்மா குழு உறுப்பினா் மரிய சாா்லஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றியக் குழு உறுப்பினா் நாகரெத்தினம், ஊராட்சித் தலைவா் கலைமணி ஜெகதீசன், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com