இருசக்கர வாகனத்தில் சென்றவா் வாய்க்காலில் தவறி விழுந்து பலி

திருமருகல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாா்.

திருமருகல்: திருமருகல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாா்.

திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்குத் தெருவை சோ்ந்தவா் சுரேஷ்பாபு (43) விவசாயத் தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூருக்கு செல்லும்போது, நிலைதடுமாறி சாலையோர வாய்க்காலில் விழுந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு, திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com