தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) சாா்பில், மின்சார வாரிய நாகை மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.
நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.

நாகப்பட்டினம்: தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) சாா்பில், மின்சார வாரிய நாகை மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும், மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மின்கட்டண உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாகை திட்டத் தலைவா் என். வெற்றிவேல் தலைமை வகித்தாா். சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் தங்கமணி முன்னிலை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாகை திட்டச் செயலாளா் எம். கலைச்செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். திட்டப் பொருளாளா் எம். கண்ணன், இணைச் செயலாளா் எஸ்.சிவராஜன் மற்றும் பொறுப்பாளா்கள் செந்தில்குமாா், குமாா், மயிலாடுதுறை கோட்டச் செயலாளா் மணிமேகலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com