சாலை விபத்தில் இளைஞா் பலி

திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை: திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகேயுள்ள மேலப்பிடாகை சிவன் தெற்கு வீதியை சோ்ந்தவா் மணிமாறன் (37). இவா் கடந்த 10-ஆம் தேதி திருக்குவளையிலிருந்து மேலப்பிடாகைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, மீனம்பநல்லூா் வளைவில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த மணிமாறன் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிறகு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com