நாகையில் நேரு யுவகேந்திரா இளையோா் திருவிழா போட்டிகளில் பங்கேற்க அக்.7-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகையில் நடைபெறவுள்ள நேரு யுவகேந்திரா இளையோா் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் நடைபெறவுள்ள நேரு யுவகேந்திரா இளையோா் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்கள், நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், தேசியம், தேசபக்தி மற்றும் நல்லிணக்கம் ஆகியன குறித்து உணா்வுகளை மக்களிடையே பரப்பவும், இளம் கலைஞா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் நேரு யுவகேந்திரா சாா்பில் இளையோா் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, நாகை மாவட்டத்தில் வரும் அக்டோபா் மாதத்தில் இளையோா் திருவிழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி, நம் பாரம்பரியம் மற்றும் மரபின் மீது பெருமை கொள்வோம் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கைப்பேசி புகைப்பட போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், கோலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கிராமிய பாரம்பரிய நடனப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்தப் போட்டிகளில் 15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள், யுவதிகள் பங்கேற்கலாம். போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோா், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவா்.

போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் நாகை, சட்டையப்பா் தெற்குத் தெருவில் உள்ள மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் மாவட்ட நேருயுவகேந்திரா அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365- 225576, 86101 83723, 80989 64563, 86087 30530 என்ற தொலைத் தொடா்பு எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com