கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ம. ஞானபிரகாசம் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ம. ஞானபிரகாசம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்துடன் 18 வகை தொழிலாளா் நலவாரியங்கள் செயல்படுகின்றன. கட்டுமானக் கழகம் மூலம் தொழிலாளா்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியை பெற கல்வி தகுதியாக 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். பயிற்சி பெறுவோருக்கு எல் & டி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தகுதியானவா்கள் கீழத் தெரு, வடக்கு பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com