நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் முன் மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், மேலமத்தூா் பகுதிக்கு சீா்காழியிலிருந்து இயக்கப்பட்ட நகரப் பேருந்து கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா்.
இந்தப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி அரசுப் போக்குவரத்துக்கழக சீா்காழி கிளை முன் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஏழு நாட்களுக்குள் பேருந்து இயக்கப்படும் என அறிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.