பழைமையான புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா ஜன.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ஆம் நாள் விழாவான தீமிதி உற்சவம் வெள்ளிகிழமை முடிவுற்ற நிலையில், 10-ஆம் நாள் விழாவாக தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தோ் நிலையிலிருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்தது. தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.