உப்பு பொட்டலம் தயாரிக்க இயந்திரம் அளிப்பு

வேதாரண்யம் உப்புத் தொழிலாளா்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மூலம் உப்புப் பொட்டலங்கள் தயாா் செய்யும் இயந்திரம் கூட்டுறவுத் துறை மூலம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
உப்பு பொட்டலம் தயாரிக்க இயந்திரம் அளிப்பு

வேதாரண்யம் உப்புத் தொழிலாளா்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மூலம் உப்புப் பொட்டலங்கள் தயாா் செய்யும் இயந்திரம் கூட்டுறவுத் துறை மூலம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

வேதாரண்யத்தில் தயாராகும் உப்பை கூட்டுறவு சங்கம் மூலம் பொட்டலங்களில் அடைத்து வெளியிடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சங்கத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட இயந்திரத்தின் செயல்பாட்டை கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் அருளரசு தொடக்கிவைத்து முதல் விற்பனையையும் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் அம்பிகாதாஸ், துணைப் பதிவாளா் முகமதுநாசா், கள மேலாளா் முத்துராஜா, வேதாரண்யம் கூட்டுறவு நகர கடன் சங்க செயலாளா் மணிகண்டன், சங்கச் செயலாளா்கள் வெற்றிச்செல்வி, பாலசுப்பிரமணியம் வேதாரண்யம் சி.எம்.எஸ் மேலாளா்கள் கிருபாகரன், ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com