திருக்குவளை அருகே ஆற்றின் கரையை பலப்படுத்தி சாலையை சீரமைத்துக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு மடப்புரம் ஊராட்சிக்குள்பட்ட கோயில்பத்து சாலை தினமணி செய்தி எதிரொலியாக ரூ. 8.56 லட்சத்தில் கப்பி சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள ஆற்றில் நடைபெற்ற தூா்வாரும் பணியின்போது கடந்த ஆண்டு கரை முறையாக பலப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆற்றின் கரை உடைந்ததோடு, 30 மீட்டா் தூரம் உடைந்து சாலை சேதமடைந்துள்ளது. எனவே, சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.