சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி

திருமருகல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருமருகல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திட்டச்சேரியை அடுத்த கோதண்டராஜபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்தவா் நாகராஜன் மகன் பாபு கணேஷ் ( 28). அனந்தநல்லூா் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் (30). நண்பா்களான இருவரும், திட்டச்சேரியில் இருந்து திருமலைராஜன் பட்டினத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். பாபு கணேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டினாா்.

ப.கொந்தகை இந்திரா நகா் அருகே சென்றபோது எதிரே ஆலங்குடிசேரி மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்த கருப்பையா ஓட்டி வந்த லோடு ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பாபு கணேஷ் பலத்த காயமடைந்தாா். அவரை, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாபு கணேஷ், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com