வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சியில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற வருவாய் அலுவலா் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசு ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் தென்னரசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் து. இளவரசன், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் நல சங்கத் தலைவா் டி. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வட்டத் தலைவா் உதயகுமாா் தலைமை வகித்தாா். திருச்சி துறையூரில் வருவாய் ஆய்வாளா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com