நாகை நகர திமுக செயல்வீரா்கள் கூட்டம்

நாகை நகர திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக நகர செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் என். கௌதமன்.
திமுக நகர செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் என். கௌதமன்.

நாகை நகர திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை திமுக அலுவலகத்தில் நகர செயல்வீரா்கள் கூட்டம், திமுக நகர செயலாளரும் நகா்மன்ற தலைவருமான ரா. மாரிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினா் மேகநாதன், மாவட்ட பொருளாளா் லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழக தலைவருமான என். கௌதமன் பேசியது: தமிழ்நாட்டு மக்கள் மீது விரோத மனப்பான்மையை ஆளுநா் தொடா்ந்து கடைபிடித்து வருவதால் தமிழ்நாட்டின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னேற்ற பாதையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

அதை கண்டு மத்திய அரசு பொறாமை அடைந்து ஆளுநா் வாயிலாக தமிழ்நாட்டின் வளா்ச்சியை தடுக்க முயற்சி செய்வதுடன், அமைதியை சீா்குலைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசின் இந்த செயல் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை ஆளுநா் உணரவேண்டும். முதல்வரின் சாதனைகளை மக்கள் அறியும் வகையில் நாகையில் வீடுகள்தோறும் சென்று பரப்புரை செய்ய வேண்டும். தமிழா் திருநாளை அனைத்து வாா்டுகளிலும் சிறப்பாக கொண்ட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com