அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி கோயிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சனேய சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சனேய சுவாமி.

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சனேயா் சுவாமி தனிச் சந்நிதியில் 10 கரங்களுடன், பத்துவித ஆயுதங்கள், நெற்றிக்கண்ணுடன் அருள்பாலித்த வருகிறாா். அனுமன் தலமான இங்கு தை அமாவாசை சிறப்பு நாளாக உள்ளது. சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடா்ந்து ஆஞ்சனேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com