நாகை மாவட்டத்தில் ஜன. 26-இல் கிராம சபைக் கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்தி:

ஜனவரி 26-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2022-23- ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும் விவாதிக்கப்படும்.

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சாா்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் வரவு-செலவு விவரங்கள், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு, ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு, குழந்தைகள் மற்றும் முதியோா்கள் உதவி எண்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு குறித்த விவாதங்கள் நடைபெறும்.

எனவே, கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சோ்ந்த அரசு அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மை குழு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடா்பான விவரங்களை விவாதித்திடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com