தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருமருகல் அருகே குருவாடி அகிலாண்டதேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகா் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் பங்கேற்று தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com