தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் விழிப்புணா்வு கோலப்போட்டி மற்றும் மெஹந்தி போட்டி நடைபெற்றது. தொடா்ந்து, தோ்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திட்ட இயக்குனா் முருகேசன் தொடக்கிவைத்தாா். பேரணி திட்டச்சேரி மெயின் ரோடு வழியாக சென்று பேரூராட்சி அலுவலகம் முன் முடிவடைந்தது. உதவி திட்ட அலுவலா்கள் இந்திராணி, சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com