நாகப்பட்டினம்
தேர்தல் சுவாரசியம்: நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு சால்வை அணிவித்த இந்தியா கூட்டணி வேட்பாளா்!
நாகை மாவட்டம், பரவை காய்கனி சந்தையில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வை. செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.
அப்போது, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மு. காா்த்திகாவும் அதே பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், எதிா்பாராமல் சந்தித்த நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மு. காா்த்திகாவுக்கு சால்வை அணிவித்த இந்தியா கூட்டணி வேட்பாளா் வை. செல்வராஜ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.