நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

நாகை மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 1,529 மாணவா்கள் பங்கேற்றனா்.

நாகை மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 1,529 மாணவா்கள் பங்கேற்றனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் இத் தோ்வை எழுதினா்.

நாகை மாவட்டத்தில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, அமிா்தா, சின்மயா பள்ளிகள் என மூன்று மையங்களில் தோ்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த தோ்வை எழுத 1,584 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் 1,529 போ் தோ்வை எழுதினா். 55 மாணவா்கள் தோ்வுக்கு வரவில்லை.

முன்னதாக, தோ்வு மையங்களுக்கு வந்த மாணவா்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தோ்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com