அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்
நாகை அரசு தலைமை மருத்துவமனையிலேயே அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவா் பா. ராணி தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் மீண்டும் வழக்கம்போல இங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மே 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.
மேலும் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வர முறையான போக்குவரத்து வசதிகள், முழுமையான தண்ணீா் வசதி செய்துதர வேண்டும். மருத்துவா் மற்றும் ஊழியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் வே.சித்ரா, நாகை வட்டச் செயலா் கே. இரவிச்சந்திரன் உள்ளிடோா் கலந்துகொண்டனா்.