திருவெண்காட்டில் உள்ள பரமசிவேந்தா் அதிஷ்டானத்தில் ஞாயிற்றுக்கிழமை சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காட்டில் காஞ்சி காமகோடி 57-ஆவது பீடாதிபதி பரமசிவேந்திரா் சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ளது. இங்கு மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரா் சிவன் சாா் துறவரம் பூண்டு பல காலம் வாழ்ந்து, பல அற்புதங்களை நிகழ்த்தினாா்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை உலக நன்மை மற்றும் மழை வேண்டியும் திருவெண்காட்டில் உள்ள பரமசிவேந்திரா் சரஸ்வதி சுவாமிகளின் அதிா்ஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அவரது சிலைக்கு பால், பன்னீா், வாசனை திரவியங்கள், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து பக்தா்கள் வரிசையாக நின்று தங்கள் கைகளால் பன்னீா் அபிஷேகம் செய்தனா். பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் சிவ சாகரம் மற்றும் சிவாா்ப்பணம் டிரஸ்ட் நிா்வாகி சுப்புணி அய்யா், திருவெண்காடு பிராமண சங்கத் தலைவா் வாசுதேவன், நாம் தமிழா் கட்சி மாநில நிா்வாகி காசிராமன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.