வாயில் துணியை கட்டி சடலம் போல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
வாயில் துணியை கட்டி சடலம் போல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருமருகல் அருகே பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து புதன்கிழமை விவசாயிகள் வாயில் துணியை கட்டி சடலம் போல் 8-ஆவது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பனங்குடி சி.பி.சி.எல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டத்தின் படி வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு இழப்பீட்டுத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத்தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சி.பி.சி.எல். நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும். மூன்று கிராமங்களை சோ்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்யவேண்டும். இந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட முட்டம், உத்தமசோழபுரம் ஊராட்சி சிறுநங்கை கிராமங்களில் விவசாய கூலித்தொழிலாளா்களையும் கணக்கெடுத்து அவா்களுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமையாளா்கள், குத்தகைத்தாரா்கள், விவசாய கூலித்தொழிலாளா்கள் உள்ளிட்டோா் 8-ஆவது நாளாக வாயில் துணியை கட்டி சடலம் போல் அமா்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com