கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 9-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருமருகல், மே 9: திருமருகல் அருகே பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து 9 -ஆவது நாளாக வியாழக்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்காக நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி,கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலித்தொழிலாளா்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டத்தின் படி வழங்கவேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு இழப்பீட்டு தொகையை 4 ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமையாளா்கள், குத்தகைதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் 9-ஆவது நாளாக தலையில் துணியை போட்டுக் கொண்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழா் கட்சியின் நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளா் காா்த்திகா,

நாகை மண்டல செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ், மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா்கள் காளியம்மாள், அஞ்சம்மாள் உள்ளிட்டோா் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com