திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவராகப் பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக திருவாரூருக்கு மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வருகை தந்தார். கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்ற அவர், அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தந்தை, சகோதரிகள், முரசொலிமாறன் மற்றும் கருணாநிதியின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர்களுமான கே.என்.நேரு, உ.மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

கைப்பேசி கோபுரத்தில் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் போராட்டம்
ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய யாசகா் கைது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

