தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பாட்டி நினைவிடத்தில் மலரஞ்சலி

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:30 pm

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவராகப் பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக திருவாரூருக்கு மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வருகை தந்தார். கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்ற அவர், அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தந்தை, சகோதரிகள், முரசொலிமாறன் மற்றும் கருணாநிதியின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர்களுமான கே.என்.நேரு, உ.மதிவாணன்,  எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.