திருவாரூரில் திங்கள்கிழமை தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை பெரிய அளவில் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருந்தன.
இதில், கோட்டாட்சியர் முருகதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. தனபால், வட்டாட்சியர் குணசீலி, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன்வாசுகிராமன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


