அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

மன்னார்குடி அருகேயுள்ள ராதாநரசிம்மபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. 
Updated on
1 min read

மன்னார்குடி அருகேயுள்ள ராதாநரசிம்மபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. 
ராதாநரசிம்மபுரம் ஊராட்சி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மேலாண்மைக் குழுவினர், கிராமக் கமிட்டியினர் இணைந்து பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்க முடிவெடுத்தனர். அதற்காக நன்கொடையாளர்களிடம் திரட்டிய ரூ. 50 ஆயிரம் நிதியிலிருந்து பீரோ, தரை விரிப்பு, இருக்கைகள், எழுதுப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, மழை மாரியம்மன் கோயிலிலிருந்து பள்ளிக்கு கொண்டு வந்து பள்ளித் தலைமையாசிரியர்
சு. ரஷ்யா பானுவிடம் வழங்கினர். 
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லீலாவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுமதி. சீர் சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார். இதில், வட்டாரக் கல்வி அலுவலர் க. குமரேசன், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நா. சுப்ரமணியன், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காசிநாதன், தச்சன்வயல் தலைமையாசிரியர் எழிலரசன், கிராமக் கமிட்டித் தலைவர் துரைக்கண்ணு, மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோவன், ஆசிரியர் இந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com