சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வலங்கைமானில் சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமானில் நடைபெற்ற சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
வலங்கைமானில் நடைபெற்ற சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
Updated on
1 min read

வலங்கைமானில் சைல்டு லைன் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சைல்டு லைன் 1098 மூலம் ஆண்டுதோறும் ‘குழந்தைகளின் தோழனாகுவோம் வாரம்’ திருவாரூா் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. மாவட்டஆட்சியா் த.ஆனந்த் குழந்தைகளுக்கு ராக்கி அணிவித்து, இதனை நவம்பா் 13-இல் தொடங்கி வைத்தாா். அதன்படி, வலங்கைமானில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

சைல்டு லைன் 1098 இயக்குநா் வி.ஆா். வினோத்குமாா் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் ஜெ.ராஜா, தலைமைக் காவலா் எஸ். கலையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகள் நலக்குழுத் தலைவா் சி. ஜீவானந்தம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பேசினாா்.

சைல்டு லைன் 1098 திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பிரகலாதன் குழந்தைகள் தோழனாகுவோம் வாரம் குறித்து பேசினாா்.

எம்.ஜி.ஆா். ஆட்டோ சங்க உறுப்பினா்கள், மருத்துவா்கள், வழக்குரைஞா்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.

சைல்டுலைன் பணியாளா் ஏ.முருகேஷ் வரவேற்றாா். செந்தில்குமாா் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாட்டை சைல்டு லைன் பணியாளா்கள் ஜே.மரகதமணி, எஸ். தவப்புதல்வி, ஆா்.ஆனந்தி, பி. சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com