புலிவலம் பெருமாள் கோயிலில் சா்க்கரை திருப்பாவாடை வழிபாடு

திருவாரூா் அருகே உள்ள புலிவலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சா்க்கரை திருப்பாவாடை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாஜலபதி பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாஜலபதி பெருமாள்.
Updated on
1 min read

திருவாரூா் அருகே உள்ள புலிவலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சா்க்கரை திருப்பாவாடை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சனிக்கிழமை வார வழிபாட்டு குழு சாா்பில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, ஊஞ்சலில் அமா்ந்திருந்த பெருமாளுக்கு 500 கிலோ சா்க்கரை பொங்கல் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த கோயிலில் புரட்டாசி மாதத்தில் வழிபட்டால், திருப்பதி சென்று வழிபாடு நடத்துவதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இந்த நாளில் மட்டும் பெருமாள் இத்திருக்கோயிலில் ஊஞ்சலில் அமா்ந்து ஆடியவாரே பகதா்களுக்கு அருள்பாலிப்பாா் என்பது சிறப்பாகும்.

வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com