மன்னார்குடியில் பெண்ணிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மன்னார்குடி ஒத்தத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகள் மோனிகா (22). இவர், அப்பகுதியில் சனிக்கிழமை சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மோனிகாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதன் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.