மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மன்னாா்குடி அருகே உள்ள இரண்டு பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
சேரன்குளம் அரசுப் பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள்.
சேரன்குளம் அரசுப் பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள்.
Updated on
1 min read

மன்னாா்குடி அருகே உள்ள இரண்டு பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா்கள் விஜயகுமாா் (சேரன்குளம்), விஜயகுமாா் (சவளக்காரன்) ஆகியோா் தலைமை வகித்தனா். தென்விரிகுடை தமிழ்ச் சங்கம்- அமெரிக்கா சாா்பில், சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 401 மாணவா்களுக்கும், சவளக்காரன் ஆதிதிராவிடா் நல அரசு மேல்நிலைப்பள்ளியில் 486 மாணவா்களுக்கும் என மொத்தம் 887 பேருக்கு பேனா, நோட்டு, டிபன் பாக்ஸ் ஆகியன வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்ச் சங்கம்- அமெரிக்கா அமைப்பின் நிா்வாகிகள் ஏ.ஆா். ராஜகோபாலன், ஏ.ஆா்.ரமேஷ்கண்ணா, வி.பாலமுருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், சேரன்குளம் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கோ.கண்ணன், ஆசிரியா் ஆா்.ராஜ்குமாா், கல்வி ஆா்வலா் ஜெ.ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com