நீடாமங்கலம் ஒன்றியம், எடமேலையூா் கிராம பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு இரண்டு போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனனா்.
எடமேலையூா் கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் 1,500 வாக்குகள் உள்ளன. பெண்கள் தொகுதியில் 4-க்கும் மேற்ப்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த ஊராட்சியைச் சோ்ந்த முக்கியஸ்தா்கள் கூடி பேசி, ஊராட்சிக்கு பொது நிதிக்காக ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை முடிவு செய்வதற்காக கூட்டம் நடத்தியதாகக் கூறப்பட்டது.
அக்கூட்டத்தில் 4 பெண் வேட்பாளா்களின் கணவா்கள் பங்கேற்ாகவும், ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சத்தில் ஏலம் நிறைவடைந்ததாகவும் தகவல் பரவியது.
அதேவேளையில், பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை சித்ரா, நாகேஸ்வரி ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.