திருவாரூரில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுபவரின் வெற்றிக்குப் பாடுபடுவது என திமுக சார்பு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்க திட்ட ஆலோசகர் பால. முருகேசன் தலைமை வகித்தார். திட்டச் செயலாளர் பொ. சுடலைமாடன், பொருளாளர் சாமிதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், திருவாரூர் இடைத்தேர்தலில் மாநிலப் பொதுச் செயலாளர் ரத்தின சபாபதி வழிகாட்டுதல் படி பிரசாரம் செய்வது, திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது, ஜன. 8, 9- ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.