வாகனச் சோதனையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் தடை 
Updated on
1 min read

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
திருவாரூர் -திருத்துறைப்பூண்டி சாலை பின்னவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் போதை தரும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் (ஹான்ஸ்) இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்தை இயக்கி வைந்த பாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கும்பகோணத்திலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாண்டியன் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com