ஊடகக் கண்காணிப்பு மையத்தில் ஆய்வு
By DIN | Published On : 28th March 2019 06:15 AM | Last Updated : 28th March 2019 06:15 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஊடகக் கண்காணிப்பு மையத்தை சட்டப் பேரவை இடைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே புதன்கிழமை பார்வையிட்டார்.
கண்காணிப்பு மையத்தில் நடைபெற்று வரும், தேர்தல் விளம்பர கண்காணிப்பு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...