காங்கிரஸ் கட்சியில் இணைந்த தமாகாவினர்

கூத்தாநல்லூரில் தமாகாவிலிருந்து விலகி புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Updated on
1 min read

கூத்தாநல்லூரில் தமாகாவிலிருந்து விலகி புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
17-ஆவது மக்களவைத் தேர்தலையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவில் கூட்டணி அமைத்து தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கூத்தாநல்லூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் எஸ்.ஜாபர் அலி மற்றும் ஜெகபர்சாதிக், கூலான் ஜெகபர் சாதிக் உள்ளிட்டோர், கூத்தாநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் எம். சாம்பசிவம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியின்போது, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியின் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர், அப்துல் அலீம் உள்ளிட்டோர் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com