சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர்த் தொட்டி..!
By DIN | Published On : 05th May 2019 01:31 AM | Last Updated : 05th May 2019 01:31 AM | அ+அ அ- |

தினமணி செய்தி எதிரொலியாக நன்னிலம் வட்டம், வேலங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட கமுகக்குடி கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர்த் தொட்டி சனிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
கமுகக்குடி கிராமத்தில் பழுதடைந்த நிலையில், மாசுபடிந்து காணப்பட்ட குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்க வேண்டுமென தினமணி நாளிதழில், ஏப்ரல் 30-ஆம் தேதி செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நன்னிலம் பேரூராட்சி அலுவலர்கள் கமுகக்குடி கிராமம் சென்று, சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொட்டியை சனிக்கிழமை சுத்தம் செய்தனர். நீண்டகாலமாக பராமரிப்பின்றி கிடந்த குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்ததற்காக பேரூராட்சி அலுவலர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.