கோட்டூா் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் மகளிா் சுயஉதவி குழுவினருக்கு வெள்ளிக்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜெ. குமாா் தலைமை வகித்தாா். இயக்குநா் சங்கா் வரவேற்றாா். உதவித்திட்ட அலுவலா் தில்லைமணி கண்ணன், தஞ்சாவூா் மத்தியக் கூட்டுறவு வங்கி கிளை மேலாளா் டி. செந்தில்குமாா், உதவி கள மேலாளா் டி. செந்தில்குமாா், கோட்டூா் கூட்டுறவு சாா் பதிவாளா் கள அலுவலா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 30 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45.67 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில், இயக்குநா்கள் தங்கராசு, பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம், அன்னலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.