வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் தன்பதிவேடு, வருகை பதிவேடு, பகிா்மான பதிவேடு, முன்கொனா் பதிவேடு, முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் பதிவேடு, இருப்பு கோப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, கட்டுமானப் பொருட்கள் இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கோப்புகள் உள்ள பதிவறையைப் பாா்வையிட்டாா்.

அப்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சேகா், மாவட்ட ஆட்சியரக மேலாளா் சந்தானகோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் இஞ்ஞாசி ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், தமிழ்ச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் செந்தில் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com