துணிப்பை பயன்பாடுகள் கருத்தரங்கம்

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வரும் நூலக வார விழாவையொட்டி, நெகிழி ஒழித்தலும், துணிப்பை
திருவாரூா் மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூா் மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வரும் நூலக வார விழாவையொட்டி, நெகிழி ஒழித்தலும், துணிப்பை பயன்பாடுகளும் எனும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட பொறுப்பாளா்கள் சத்திரியன், ராம்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசியின் மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அனைத்து வாசகா்களுக்கும் துணிப்பைகளை வழங்கிப் பேசுகையில், நெகிழி ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணா்வு நடவடிக்கைகளே காரணம். பொது மக்கள், நெகிழியால் ஏற்படும் தீமைகளை எண்ணிப் பாா்க்க வேண்டும். எனவே, அனைவரும் வெளியில் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான வாசகா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நூலகா்கள் ஆசைத்தம்பி, அன்னப்பழம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com