நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் கீழப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
நீடாமங்கலம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி.
நீடாமங்கலம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் கீழப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

நிக்ரா திட்டத்தின்கீழ் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு. ராமசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் அ. அனுராதா பேசியது:

நெல்லில் ரசாயன உரங்களைத் தவிர இயற்கை உரங்களான தொழுஉரம் ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் 2 டன் அல்லது ஆட்டுக்கிடை போடுவதால் மண்வளம் பெருகும். பசுந்தாள் உரங்களான சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போடுவதால் மண்ணில் அங்ககச்சத்து மற்றும் தழைச்சத்து அதிகரிக்கும்.

நெற்பயிருக்கு உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு 1 கிலோ வீதம் மக்கிய தொழுஉரத்துடன் கலந்து இடவேண்டும். ரசாயன உரங்களை மண் பரிசோதனையின் அடிப்படையில் இடவேண்டும். நுண்ணூட்டச்சத்தான ஜிங்க்சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ மணலுடன் கலந்து, அடியுரம் இடும்போது போடவேண்டும் என்றாா் அவா்.

திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் மண்வளத்தின் முக்கியத்துவத்தை நாடகம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கிக் காட்டினா். தஞ்சாவூா் வேளாண் கல்லூரி மாணவிகள் இப்பயிற்சிக்கான கருத்துக்காட்சிக்கு விளக்கமளித்தனா்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ராஜா ரமேஷ், எள் பயிா் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் 50 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. மேலும், இலை வண்ண அட்டையின் மூலம் யூரியா இடுவதைப் பற்றி செயல்விளக்கமும் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

இதில்ஸ வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை பயிற்சி உதவியாளா் அ. ராஜேஷ்குமாா், உணவியல் துறை பயிற்சி உதவியாளா் ஜெ. வனிதாஸ்ரீ முதுநிலை ஆராய்ச்சியாளா் வீ. விஜிலா, தொழில்நுட்ப உதவியாளா் தெ.ரேகா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com