திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பத்து நாட்கள் நடைபெற்ற மனவளக்கலை பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது.
இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் திருவாரூர் மனவளக்கலை மன்றக் கிளை சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எம். துரைராசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருவாரூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் எஸ்.முத்து, செயலாளர் ஆர். தியாகராஜன், மூத்த பேராசிரியர் சுந்தரி தியாகராஜன் மற்றும் பேராசிரியர்கள் பி. உதய சுந்தரி, எஸ். சாரதா, என். பிரேமாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் ராம்பிரகாஷ் வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். கணேஷ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.