திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சாா்பில், புதன்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.
நகராட்சி பேருந்து நிறுத்தத்தில், ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். ரவிசுந்தா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை அரசு சித்த மருத்துவா் அனுஷா தொடங்கி வைத்தாா். இம்முகாமில் 500 நபா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இதில், டிஎஸ்பி பழனிசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ராஜேந்திரன், டி. வெங்கடேசன், எஸ். திலகமணி, வி. தணிக்காசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.