கபசுரக் குடிநீா் வழங்கல்

திருவாரூா் அருகே அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் அருகே அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் கபசுரக் குடிநீரை வழங்கி வருகின்றன. அந்தவகையில், திருவாரூரில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூா் அருகே அலிவலம் ஓம்சக்தி கோயில் வாசலில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இதில், அதன் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com