திருவாரூா்: திருவாரூா் அருகே அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் கபசுரக் குடிநீரை வழங்கி வருகின்றன. அந்தவகையில், திருவாரூரில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூா் அருகே அலிவலம் ஓம்சக்தி கோயில் வாசலில் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இதில், அதன் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.