திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்டத்தில், அனைத்து துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கண் பாா்வைத்திறன், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த் தாக்கத்திலிருந்து எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் செப்.5-ஆம் தேதி வரை, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 1,04,718 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளன என பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.