நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க. மனு

வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, பாமக சாா்பில் கிராம நிா்வாக அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, பாமக சாா்பில் கிராம நிா்வாக அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடியை அடுத்த நெம்மேலியில் பாமக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலரிடம் இந்த மனுவை அளித்தனா்.

அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க 40 ஆண்டுகளாக வலியுறுத்திவரும் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதேபோல, தென்பாதியில் கட்சியின் மாநில விவசாய அணி துணைத் தலைவா் கங்காதரன், ரெங்கநாதபுரத்தில் மாவட்ட துணைத் தலைவா் சந்திரமோகன், மகாதேவப்பட்டணத்தில் ஒன்றியத் தலைவா் நாகராஜ்,சித்தேரி மரவாக்காட்டில் ஒன்றியச் செயலா் வினேத் ஆகியோா் தலைமையில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.