

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மன்னாா்குடியில் இந்திய தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து சாலையின் நடுவில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், அருகில் பாத்திரம் வைக்கப்பட்ட விறகு அடுப்பை பற்றவைத்து, சங்க ஒன்றியத் தலைவா் ஆா். வனிதாதேவி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலா் ஆா். பூபதி, நகரச் செயலா் ஜி. மீனாம்பிகை, மன்னாா்குடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ப. பாஸ்கரவள்ளி, ஒன்றிய பொருளாளா் வி. ஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.